வருவாய் பற்றாக்குறை 1.17%ஆக குறையும்! தமிழக அரசின் கடனும் 26%ஆக குறையும்! தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருக்கிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை என்பது கணிசமாகக் குறைந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார். வருவாய் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், விரைவில் 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை அடைவோம் என்றும் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. மாநிலத்தின் வருவாயை அதிகரித்து, செலவினங்களைக் குறைக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வருவாய் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்து கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

தங்கம் தென்னரசு
இது தொடர்பாகத் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில், "2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 30,728 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளில் 28,124 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 28,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வருவாய் மதிப்பீடான 249,713 கோடி ரூபாய் மொத்த வருவாய் வரவுகளில் 75.31சதவீதத்தைக் கொண்டிருக்கும்.
மத்திய அரசு மானியங்கள்
அரசின் பெருமுயற்சிகளால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்து வரும் அதே வேளையில், மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள், மத்திய வரிகளில் பங்கு ஆகியவை மொத்த வருவாய் சதவீதத்தில் குறைந்துகொண்டே வந்துள்ளன. மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்குத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவிக்க மறுத்ததும் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய இரு தொடர் பேரிடர்களின் நிவாரணப் பணிகளுக்குத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்ததும் மாநில அரசின் நிதிநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23,354 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள். திருத்த மதிப்பீடுகளில் 20.538 கோடி ரூபாயாகக் கணிசமான அளவிற்குக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் முழு பங்குத்தொகையை மத்திய அரசு வரும் நிதியாண்டில் விடுவிக்கும் என எதிர்பார்த்து. மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள் 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23,834 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வரவினங்கள்
2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 299,009 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவினங்கள். திருத்த மதிப்பீடுகளில் 293,906 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் வரவினங்கள் 3.31569 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீடுகளைவிட 12.81 சதவீதம் அதிகமாகும்.
வருவாய் பற்றாக்குறை
தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளால் வருவாய் பற்றாக்குறை 3.2 சதவிகிதத்தில் இருந்து 1.17 சதவிகிதமாக குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் மூலம் நமது வருவாய் பற்றாக்குறை நிலை மேம்பட்டு 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை அடைவோம்.
செலவினங்கள்
தமிழக அரசின் செலவினங்களைப் பொறுத்தவரை அது வரும் 2025-26ம் நிதியாண்டில் ரூ.3.73 லட்சம் கோடியாக இருக்கும் மதிப்பீடு செய்யப்படும். இது கடந்த நிதியாண்டின் செலவின திருத்த மதிப்பீடுகளை விட 9.65% வளர்ச்சி ஆகும்.
2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 49.279 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை, திறமையான நிதி மேலாண்மையின் பலனாக திருத்த மதிப்பீடுகளில் 46467 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள் நடப்பு ஆண்டில் குறைந்த போதிலும் வருவாய்ப் பற்றாக்குறை குறைவாகவே அமைந்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைந்து 41635 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதன்முதலாக 2015-16 ஆம் ஆண்டு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒரு சதவீதம் என்ற அளவினைக் கடந்த வருவாய்ப் பற்றாக்குறை மாநில நிதி நிலைமை தொடர்ந்து சரிவைச் சந்தித்ததால், 2020-21ஆம் ஆண்டில் 3.28 சதவீதமாக உயர்ந்தது. இந்த சரிவுப் போக்கினை நேர்மறையாக மாற்றிட வேண்டும் என இந்த அரசு மேற்கொண்ட அபார முயற்சிகளின் காரணமாக அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து வரும் நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய்ப் பற்றாக்குறையின் விகிதம் 1.17 சதவீதமாக 2015-16 ஆம் ஆண்டு நிலைக்கு அருகில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
நிதிப் பற்றாக்குறை
2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 108,690 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை. திருத்த மதிப்பீடுகளில் 6.992 கோடி ரூபாய் குறைந்து 101698 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறைவாக மதிப்பிடப்பட்ட போதிலும் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 344 சதவீதமாக மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 3.26 சதவீதமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 106.963 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதிநிலையை மேம்படுத்துவதில் அரசிற்கு உள்ள உறுதிப்பாட்டை வெளிகாட்டுகிறது..
கடன்கள்
நிகரக் கடன்கள் குறைந்துள்ள போதிலும், 2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2641 சதவீதமாக மதிப்பிடப்பட்ட மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒட்டுமொத்தக் கடன் விகிதமானது சற்றே அதிகரித்து 26.43 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அடிப்படையில், 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் இது 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் இவ்விகிதம் 26.07 சதவீதமாக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15வது நிதிக்குழு 2025-26 ஆம் ஆண்டிற்கு நிர்ணயித்துள்ள 28.70 சதவீதத்திற்குள்ளாகவே உள்ளது" என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications