வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சென்னையில் வெளியிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமானது.
இந்த நிலையில் அந்த பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இன்று சென்னையில் வெளியிட்டார். அவர் கூறுகையில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.91 கோடி ஆகும்.
அவர்களில் 2.92 கோடி ஆண் வாக்காளர்களும் 2.98 கோடி பெண் வாக்காளர்களும், 3-ஆம் பாலினத்தவர்கள் 5,472 பேரும் உள்ளனர். இதில் தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டம் சென்னை ஆகும். இங்கு 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் குறைந்த அளவில் வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக அரியலூர் அறியப்படுகிறது. இங்கு 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர்.
அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர். இங்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். அது போல் துறைமுகம் தொகுதியில் 1,66,511 வாக்காளர்கள் உள்ளனர்.
இளைய வாக்காளர்கள் அதாவது 18 வயது முதல் 19 வயது வரை உள்ள வாக்காளர்களை கொண்ட தொகுதி திருப்பரங்குன்றம் ஆகும். இங்கு இளைய வாக்காளர்கள் 7696 பேர் உள்ளனர். வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 97 பேரின் பெயரும் பட்டியலில் உள்ளது.