எங்கள் திட்டத்தை ஜனாதிபதியே புகழ்ந்தார்...! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
சென்னை: அதிமுக அரசின் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டியதோடு, நாடளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போதும் அதனை அவர் குறிப்பிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற காவிரி கூக்குரல் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். ஜக்கி வாசுதேவ் காவிரி கூக்குரல் என்ற பெயரில் தலைக்காவிரியில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பயணத்தை இன்றுடன் முடித்தார். அது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

அதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கடந்த 2011-ல் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சுற்றுச்சுழலை காப்பதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்துவதாக கூறினார். மேலும், பவானி, நொய்யல், அமராவதி, வைகை ஆறுகளை மாசடையாத வகையில் புனரமைக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.
வேளாண்துறை மூலம் நடப்பு ஆண்டில் மட்டும் இரண்டரை கோடி பனை விதைகளை நட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் மரங்களை நட இளைஞர்களும், மாணவர்களும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் ஜக்கி வாசுதேவ் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கும் எனவும் உறுதியளித்தார்.
விழாவில் எந்த இடத்திலும் மறந்தும் கூட ஜக்கி வாசுதேவின் பெயரை முதல்வர் உச்சரிக்கவில்லை. சத்குருஜி..சத்குருஜி என்று மட்டும் தான் திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தார்.
-
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சார், இது பேட்டரி வைக்கிற இடம்.. நாகர்கோவிலில் எடப்பாடி வேனில் சல்லடை போட்ட பறக்கும் படை அதிகாரிகள்












Click it and Unblock the Notifications