இடைத்தேர்தலில் பணம் கொடுக்கும் திமுக... தமிழிசையை சந்தித்த பின் முதல்வர் எடப்பாடி புகார்
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் பணம் கொடுத்து வெற்றி பெற திமுக முயற்சிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநராக பதவியேற்ற பின்னர் சென்னை வருகை தந்துள்ள தமிழிசை சவுந்தரராஜனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் நியமிக்கப்பட்ட போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார்.

வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி. இந்நிலையில் சென்னையில் நேற்று தமிழிசையை நேரில் சந்தித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மேதகு தெலங்கானா ஆளுநர் @DrTamilisaiGuv அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். pic.twitter.com/7yQInVagI2
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 8, 2019
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா ஆளுநராக தமிழிசையை நியமித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெல்ல திமுக முயற்சிக்கிறது.
ஆனால் இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களே வெல்வார்கள். சிறப்பான வசதிகள் கொண்ட சிங்கப்பூர் நாட்டிலும் கூட டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. தமிழக அரசு நெருக்கடி கொடுத்ததால் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்திருக்கிறது.
கீழடியில் அருங்காட்சியம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications