கோழித்தீவனம் மக்காச்சோளத்திற்கு இறக்குமதி வரியை நீக்குங்க.. பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்
சென்னை: முக்கிய கோழித் தீவனமாக மக்காச்சோளத்திற்கு கடும் பற்றாக்குறை நிலவுவதால் வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
கோழித் தீவனத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மக்காச் சோளம். இந்தியாவில் நிகழாண்டில் 80 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி சரிந்ததால், கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான மக்காச்சோளம், உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து, சுமார் 4 லட்சம் டன் அளவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு கோழிப்பண்ணை சங்க தலைவரும் நாமக்கல் எம்பியுமான சின்ராஜ் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

கோழித்தீவனம்
இந்நிலையில் கோழிப் பண்ணையாளர்கள் மக்காசோளத்தை இறக்குமதி செய்ய இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்..

கோழி இறைச்சி
அந்த கடிதத்தில், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்டட மாவட்டங்களில் கோழி வளர்ப்பு வணிகம் நடந்து வருவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ந 3.5 முதல் 4 கோடி வரை அடுக்கு பறவைகள் கொண்ட பல்வேறு திறன்களில் சுமார் 1,000 முதல் 1,300 அடுக்கு பண்ணைகள் உள்ளது என்றும்.. 2013-14 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் முட்டை உற்பத்தியில் 23.5% மற்றும் கோழி இறைச்சியில் 30.53% என தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் தமிழக முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசு ஊக்குவிப்பு
கோழி வளர்ப்பை தமிழக அரசு பெரிதும் ஊக்குவித்து வருகிறதாக கூறிய முதல்வர், கோழி இறைச்சியில் நான்காவது இடத்திலும் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் தமிழகம் உள்ளதாக தெரிவித்தார்.

கோழிப்பண்ணையாளர்கள் பாதிப்பு
அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்குதலால் நாடு முழுவதும் மக்காச் சோளத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோழி தீவனத்தில் 47 % மக்காச் சோளம் தான் உள்ளது என்றும் சோளம் விலை உயர்வால் கோழிப்பண்ணையாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு கடிதம்
கோழிப் பண்ணையாளர்கள் உற்பத்தி செய்யும் மக்காச் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும் என்றும் கோழிப் பண்ணையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்றும் முதல்வர் தனது கடித்தத்தில் வலியுறுத்தி உள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications