Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வாங்க.. விஜய்யின் தவெக-விற்கு ஸ்டாலினிடம் இருந்த பறந்த அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் முக ஸ்டாலின் கூறியதாவது:-

All party meet Stalin Tamil Nadu

தமிழ்நாடு இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் 5 ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ள 40 கட்சிகளை அழைத்து அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அழைப்புக் கடிதம் கொடுக்க உள்ளோம்.

இது தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது கடுமையாக பாதிக்கப்படும்.

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அந்த எண்ணிக்கையை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு 2026-ம் ஆண்டில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. பொதுவாக மக்கள் தொகையை கணக்கிட்டு இது மேற்கொள்ளப்படுகிறது. என்று கூறினார். இந்த அனைத்துக்கட்சி கூட்டம் வரும் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க அழைப்பு​விடுத்து கட்சிகளின் தலைவர்​களுக்கு முதல்வர் ஸ்டா​லின் கடிதம் அனுப்​பி​யுள்​ளார். இதில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிட்ஸ் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுக, புதிய தமிழகம் , இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, ஆம் ஆத்மி கட்சி உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக கட்சித் தலைவர்​களுக்கு முதல்வர் ஸ்டா​லின் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:- இந்தியாவின் கூட்டாட்சி முறையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், தமிழ் மக்களின் நலன் காப்பதற்கும் தேவையான பல்வேறு முயற்சிகளை நாம் பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறோம். இருப்பினும், நிதிப் பகிர்விலும், அதிகாரப் பகிர்விலும், நம் உரிமைகளைக் காப்பதற்குத் தொடர்ந்து போராட வேண்டிய சூழ்நிலையிலே நாம் உள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளை ஒன்றிய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ள சூழலில், நம் மாநிலம் சந்திக்கக்கூடிய இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு, தங்கள் கட்சி / இயக்கத்தின் ஆதரவைக் கோருவதற்காக இக்கடிதத்தை நான் தங்களுக்கு எழுதுகிறேன்.

தமிழகத்​தின் லோக்சபா தொகு​திகள் எண்ணிக்கை மேலும் குறைக்​ கப்​பட்​டால் தமிழகத்​தின் குரல்வளை முழு​மையாக நசுக்​கப்​படும். இது மட்டுமின்றி, தமிழகத்​தின் நலன் சார்ந்த பல்வேறு கொள்கை முடி​விலும், மத்திய அரசின் நடவடிக்கைகள் நமது உரிமை​யைப் பறிப்​ப​தாகவே அமைந்​துள்ளன. இந்த கடுமையான விளைவுகளை கருத்​தில் கொண்டு, லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு முறை, நமது மாநிலத்தை பாதிக்காத வகையில் செயல்​படுத்​தப்​படுவதை உறுதிப்​படுத்த வேண்​டும்.

இதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலமிது. இந்த கூட்டு முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பை கோரு​கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக கலந்​தாலோ​சித்து மாநிலத்​தின் நலன் காப்​ப​தற்கான ஒருமித்த கருத்து​களின் அடிப்​படை​யில் தகுந்த உத்திகளை தீட்​டிச் செயல்​படுத்த அழைப்பு விடுக்​கிறேன் என தெரி​வித்​துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+