6 தொகுதிகள்.. காய் நகர்த்தும் திமுக.. பிடிவாதமாக நிற்கும் சிபிஎம்.. பெ.சண்முகம் சொன்னது என்ன?
சென்னை: திமுக சொல்லும் தொகுதி எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் ஏராளமான புதிய கட்சிகள் இணைந்திருப்பதால் இரட்டை இலக்க தொகுதிகள் என்ற கோரிக்கையை கைவிட்டதாக கூறிய பெ.சண்முகம், திமுகவுடன் நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், மூஸ்லீம் லீக் மற்றும் மமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. அடுத்ததாக சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேசி வருகிறது.

சிறிய கட்சிகளான மக்கள் நீதி மய்யம், ஆதித் தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தையை திமுக முடித்துவிட்டது. இந்த நிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் 2அம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்பின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், திமுக தரப்பில் தொகுதிகளின் எண்ணிக்கையை சொல்லி இருக்கிறார்கள். அதில் எங்களுக்கு ஏற்பு இல்லை.. கூடுதலான தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறோம்.. இதனால் திமுக தலைமையுடன் பேசிவிட்டு மீண்டும் பேசலாம் என்று கூறி இருக்கிறார்கள்.
இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும்.. திமுக கூட்டணியில் புதிய பல கட்சிகள் இணைந்துள்ளன. இப்படி நியாயமான காரணத்தை திமுக தரப்பு கூறியுள்ளது. அது ஏற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த கூடுதலான தொகுதிகளுக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூறி இருக்கிறோம்.
நாளை மீண்டும் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கூறி வந்தார். தற்போது கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கூறி இருந்தார். இதன் மூலமாக திமுக தரப்பில் கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதி எண்ணிக்கையையே மீண்டும் சொல்லப்பட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது.
-
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications