இரட்டை இலை வேண்டாம்.. குக்கர் சின்னமே போதும்.. அமித்ஷாவிடம் சொல்லிவிட்ட டிடிவி தினகரன்!
டெல்லி: மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் குக்கர் சின்னத்திலேயே அமமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்பதை டிடிவி தினகரன் அழுத்தமாக சொல்லியதாக தெரிய வந்துள்ளது. அதிக தொகுதிகள் பெறுவதில் டிடிவி தினகரன் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்றாலும், இரட்டை இலை சின்னம் வேண்டாம் என்று டிடிவி தினகரன் தீர்க்கமாக முடிவு எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்யும் முடிவில் அமித்ஷா இருக்கிறார். இதற்காக நேற்று முன்தினம் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிலேயே எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று இறுதி முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் எடப்பாடி பழனிசாமி முக்கியமான ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை தவிர்த்து ஏனைய கூட்டணி கட்சிகள் அனைத்தும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும்.. அப்படி இரட்டை இலை அதிக தொகுதிகளில் போட்டியிட்டால், அதிமுக வெற்றி உறுதியாகும் என்று கூறி இருக்கிறார். இதனால் அமித்ஷாவும் சம்மதம் கூறி இருக்கிறார்.
இதன்பின் நேற்றே டிடிவி தினகரன் டெல்லி சென்றாலும், இன்று மதியம் தான் அமித்ஷாவை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது அமமுகவுக்கு 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்று அமித்ஷா தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் டிடிவி தினகரனும் அதிக தொகுதிகளை பெறும் எண்ணத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அமித்ஷா அமமுக வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்தில் நிற்கலாமே என்று ஆலோசனை செய்திருக்கிறார். ஆனால் டிடிவி தினகரன், தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் என்று எதுவும் தேவையில்லை.. ஆனால் அமமுக வேட்பாளர்கள் குக்கர் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அழுத்தமாக கூறி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அமமுகவுக்கு வழங்கப்படும் தொகுதிகள் பெரும்பாலானவை தென் மாவட்டங்களில் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் அமமுக கட்டாயம் போட்டியிடும் என்று டிடிவி தினகரன் கூறி இருந்தார். இது தவிர்த்து தேனி மாவட்டத்தில் சில தொகுதிகளும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் சில தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
-
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
போளூர் தொகுதியை விட்டுக் கொடுத்தாரா அக்ரி கிருஷ்ணமூர்த்தி? மகனுக்காக இறங்கிய அமைச்சர் எவ வேலு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது?












Click it and Unblock the Notifications