Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சார வாரியம் சரவெடி.. தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் "சார்ஜிங் மையங்கள்".. இ சார்ஜிங் பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகரித்துவரும் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக தமிழ்நாடு மின்வாரியம், அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.

உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது. அந்தவகையில், நம்முடைய நாட்டிலும், மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை பெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு நிறுவனங்கள் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வமும் காட்டி வருகின்றன.

TN Electricity Board E Vehicles and 100 places to set up charging centers for electric vehicles in Tamil Nadu

கடந்த செப்டம்பர் மாதம் வரை 10.44 லட்சம் மின்சார வாகனங்கள் இந்தியாவில் விற்பனை ஆகி உள்ளன. இதில், தமிழகத்தில் 4.14 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன.

சார்ஜிங் பாயிண்ட்: இந்நிலையில், தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாட்டில், ஹைவேஸ்களில், 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.. அதாவது, வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

மக்களின் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் மின்சார வாரியம் கூறியிருந்தது.. இப்போது இதுகுறித்த இன்னொரு அப்டேட் வெளியாகி உள்ளது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க 100 இடங்களை மின்வாரியம் கண்டறிந்துள்ள நிலையில், விரைவில் இதற்கான டெண்டர் விடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள்: அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக தமிழ்நாடு மின்வாரியம் தேசியநெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க திட்டமிட்டது. இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் தலா 25 கிமீ தூரத்துக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் இடங்களை தேர்வு செய்யும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் சொல்லும்போது, தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு மின்சார வாகன கொள்கையை வெளியிட்டது. அதில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.. அதன்படி, முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் 100 இடங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

சார்ஜிங் மையங்கள்: அந்த இடங்களில் சார்ஜிங் மையங்கள் மட்டுமின்றி வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, குடிநீர், ஓட்டுநர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதி, தீ தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படும்.. விரைவில் இதற்கான டெண்டர் விடப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மின்சார வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகி வரும்நிலையில், தமிழக மின்வாரியத்தின் இந்த தகவல் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+