டெல்டாவில் திமுக ரொம்ப ஸ்ட்ராங்.. நெல்லை வைத்து பாஜக பாலிடிக்ஸ்! விளாசிய அமைச்சர் சக்கரபாணி!
திண்டுக்கல்: 2021 தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றதால் நெல்-லை வைத்து பாஜக - அதிமுக அரசியல் செய்ய பார்க்கிறார்கள் எனவும், ஆனால் அதற்க்யு எப்பொழுதும் வாய்ப்பு இல்லை, டெல்டா மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ளனர் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பிஎஸ்என்ஏ கல்லூரி கலையரங்கில் நடைபெறும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அக்டோபர் 1 முதல் குறுவை நெல் கொள்முதல் பணி நடைபெறும்.

சக்கரபாணி குற்றச்சாட்டு
டெல்டா மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் ஈரப்பத சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டது. அதன் பேரில் முதலமைச்சர் அனுமதி பெற்று துறையின் செயலாளர் மத்திய செயலாளருக்கு கடிதம் எழுதினார். உடனடியாக தமிழகத்திற்கு 3 மத்திய குழுக்கள் வந்து பார்வையிட்டனர். குழு பார்வையிடும் பொழுது நெல்லின் ஈரப்பதம் 20 முதல் 25% வரை இருந்தது. ஆனால் அனுமதி வழங்கவில்லை. நெல் ஈரப்பதம் 17% இருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என சென்னைக்கு வந்திருந்த மத்திய அமைச்சரிடமும் நான் மற்றும் துறை சார்ந்த அலுவலருடன் இணைந்து கடிதம் கொடுத்திருந்தோம்.
டெல்டா நெல் அரசியல்
செறிவூட்டப்பட்ட அரிசி 100 கிலோவிற்கு 1 கிலோ கலக்க வேண்டும் என விதி இருந்தது. ஜூலை மாதம் முதல் மத்திய அரசு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதன்படி 34,000 டன் கொள்முதலுக்கு 5 ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தோம். 10 மெட்ரிக் டன் -க்கு 1 சாம்பிள் என மத்திய அரசு கூறியிருந்தார்கள். அதற்கும் விதிவிலக்காக 25 மெட்ரிக் டன்னுக்கு ஒரு சாம்பிள் எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தோம். ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா தமிழ்நாடு ஆகிய இடங்களில் அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல் கொள்முதல் சிக்கல்
ஆனால் நெல் ஆய்வு செய்வது வட இந்தியாவில் உள்ளது. ஆய்வு மையத்தை தென்னிந்தியாவிற்கு கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தோம். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி நெல் கொள்முதல் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பேசினார். ஆனால் அதற்கு யாரும் பதில் அளிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நெல் ஆய்வு செய்து சென்றனர் அவர்களாவது அனுமதி வாங்கி கொடுக்கலாம். அன்புமணியும் கூட்டணியில் உள்ளார். அவரும் வாங்கித் தரவில்லை.
பாஜக அதிமுக அரசியல்
2021 சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதனால் நெல்லை வைத்து அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனர். அதற்கு எப்பொழுதும் வாய்ப்பு இல்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் முதலமைச்சர் நெருக்கமாக உள்ளனர். தற்போது விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் முதலமைச்சர் கொடுத்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டர் ரூ 20 ஆயிரம் இழப்பீடு தருவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஈரப்பதம் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மத்திய அரசு காலம் தாழ்த்துகின்றனர் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றனர்." என்றார்.
-
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications