காசு, பணம், துட்டு, மணி! அரசு ஊழியர்கள் காட்டில் "மழை"! தீபாவளி போனஸ் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை 2023-2024 இல் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டை போல் அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44,270 பணியாளர்களுக்கு ரூ. 28 கோடியே ஒரு இலட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.
அது போல் போக்குவரத்து கழகத்திற்கும் போனஸ் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் டாஸ்மாக் பணியாளர்களுக்கான போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 20 சதவீதமாக உயர்த்தி வழங்குமாறு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தது.
அதன்படி தமிழக அரசுடன் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து இன்றைய தினம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தமிழக அரசு ஊழியர்களுக்கு நிறைய இனிப்பான செய்திகள் வருகின்றன. அந்த வகையில் அண்மையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications