Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைமை செயலகத்தில் தமிழக அரசு கொண்டு வந்த அதிரடி மாற்றம்.. அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், துறை செயலாளர்கள் அலுவலகங்கள் இயங்கிவருகிறது. இதன் அருகே நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10 தளம் கொண்ட கட்டிடத்தில் அரசின் 54 துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 5 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணியாற்றுகிறார்கள்.. இங்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு அரசு பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

தமிழ்நாடு அரசின் நிர்வாகம் 43 துறைகளைக் கொண்டிருக்கிறது. இந்தத் துறைகளின் தலைமை அலுவலகங்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து செயல்படுகின்றன. சில அலுவலகலங்கள் மட்டும் அருகே உள்ள எழிலகத்தில் இயங்குகின்றன.

TN Government employees oppose setting up biometric attendance register for Secretariat employee

குறிப்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, உயர்கல்வித் துறை, நிதித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை,
பொதுப் பணித் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைஉள்பட பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ளன

ஒவ்வொரு துறைக்கும் நிர்வாகத் தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இருப்பார். அவருக்கு கீழ் பல்வேறு அதிகாரிகள், உதவியாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஒரு சில பெரிய துறைகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் போன்ற கூடுதல் உயர் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். அனைத்து துறைகளுக்கும், தலைமைச் செயலகம் முழுமைக்கும் நிர்வாகத் தலைவராக தலைமைச் செயலாளர் இருக்கிறார். இவர் முதல்வரின் வழிகாட்டுதலின் படி செயல்படுவார்.

ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை தவிர, கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் செக்ரட்டரிகள் போன்ற பல நிலைகளில் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். ஒவ்வொரு துறை அமைச்சகமும் சென்னை தலைமைச் செயலகத்தில் தான் செயல்பட்டு வருகிறது. அதேபோல், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10 தளம் கொண்ட கட்டிடத்தில் அரசின் 54 துறைகளின் அலுவலகங்கள் இருக்கிறது. அங்கு சுமார் 5 ஆயிரம் பேர் அரசு ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணிபுரிய வேண்டும்.

இந்த நிலையில் ஊழியர்களின் வருகை பதிவை டிஜிட்டல் முறையாக்கும் வகையில் முக அமைப்புடன் கூடிய பயோமெட்ரிக் வருகை பதிவு முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மை துறை அலுவலகத்தில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது. ஊழியர்கள் காலையில் பணிக்கு வந்தபோதும், மாலையில் வீடு திரும்பும்போதும் பதிவு செய்தனர். ஆனால் இந்த நடைமுறைக்கு தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+