4வது நாளாக உண்ணாவிரதம்.. போராடும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்த முடிவு!
சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, நிதித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரந்தரம், சம ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் சுமார் 4,000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

நான்காவது நாளாக நடந்து வரும் உண்ணாவிரத போராட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்துள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தின்போது மயங்கி விழுந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை கர்ப்பிணிகள் உட்பட 70 மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டக்களத்தில் மயங்கி விழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் இதற்காக போராடியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு உடனடியாக தலையிட்டு, ஆசிரியர்களின் ஒற்றை கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அமலுக்கு கொண்டு வர அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வை கொண்டு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, நிதித்துறை செயலாளர் ஆகியோர், ஆசிரியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நான்கு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications