ஜூலை மாதம் வழங்கவேண்டிய நீரை வழங்க உத்தரவிடுங்கள்.. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்!
சென்னை: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும். அந்த வகையில் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு 34 டிஎம்சி அளவு தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும்.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கமுடியாது என அவர் தெரிவித்தார்.

இது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டெல்டா பாசனத்திற்கு தேவையான நீரைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா, மத்திய நீர்வளத்துறைக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜூலை மாதத்திற்குள் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும், அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி தண்ணீர் மற்றும், ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரை வழங்க உத்தரவிட வேண்டும், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்க அறிவுறுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே போதுமானதாக இருப்பதால் அடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான டிகே சிவக்குமாரின் கருத்து - தமிழ்நாடு அரசின் கடிதம் ஆகியவை இரு மாநில மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications