மத்திய அரசின் புரோக்கர் தான் தமிழக ஆளுநர்... வைகோ ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Vaiko Angry:பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசின் புரோக்கர்
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசின் புரோக்கர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான விவகாரத்தில் ஆளுநரிடம் எதிர்க்கட்சியினர் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழக ஆளுநர் மத்திய அரசின் புரோக்கர் என வைகோ பதிலளித்தார்.
கடந்த மாதம், ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications