75 ஆண்டு வரலாற்றில் இப்படி நடந்தது இல்லை.. தீர்ப்பு தந்த நீதிபதிக்கு அச்சுறுத்தல்.. ஆளுநர் ரவி ஆதங்கம்
சென்னை: திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு தந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தார்கள் என்றும், தீர்ப்பு தந்த நீதிபதி அச்சுறுத்தப்பட்ட சம்பவம் 75 ஆண்டுகால வரலாற்றில் நடந்ததே இல்லை எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். மேலும் நம் வரலாற்றிலேயே இது நடக்காதது என்றும், அரசமைப்பை குலைப்பதற்கான திட்டமிட்ட முயற்சிதான் இது என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தீர்ப்பு தந்த நீதிபதி அச்சுறுத்தப்பட்ட சம்பவம் போன்று 75 ஆண்டு வரலாற்றில் நடந்தது இல்லை. அரசமைப்பை குலைப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி இது. நமது வரலாற்றில் இதுவரை நடக்காதது. திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு தந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவில் மகிழ்ச்சி இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் செல்லுங்கள்" என்று கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பின்னர் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து கார்த்திகை நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என பலரும் நினைத்த நிலையில், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார்க் கோவில் அருகேயே தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனை எதிர்த்து கோயில் நிர்வாகம், மதுரை மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தீபம் ஏற்றலாம் என்று கூறி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. இதற்கு மத்தியில் ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு, ஒரு தலைபட்சமானது எனவும் தொடர்ந்து ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி தீர்மானம் கொண்டு வரக்கோரி சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இதற்கு சில முன்னாள் நீதிபதிகள், நீதித்துறையை மிரட்டும் முயற்சி என எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இத்தகைய சூழலுக்கு நடுவேதான் ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கண்டவாறு பேசியுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications