Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டோல் முருகன்"தான்.. அத்துமீறிய கள்ளக்குறிச்சி சுங்க சாவடி.. ஆன் த ஸ்பாட்டில் அலறவிட்ட வேல்முருகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு உறுதி மொழி குழுவினரிடம் அத்துமீறியதால் கள்ளக்குறிச்சி சுங்க சாவடியில் வாகனங்களை கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்க அக்குழுவின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சுங்க சாவடிகள் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதை தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் போராடியும் வருகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது அதன் அடையாளமாக சுங்க சாவடிகளை மறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்துவதும் வழக்கம்.

TN Govt assurances committee head Velmurugan orders not collect Tax in Kallakurichi Toll Plaza

கடந்த 2018-ம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அக்கட்சியினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. இதனையடுத்து சுங்க சாவடியை தாக்க சொன்னதாக வேல்முருகன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து கடந்த வாரம் வேல்முருகன் எம்.எல்.ஏ., சென்னை உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

TN Govt assurances committee head Velmurugan orders not collect Tax in Kallakurichi Toll Plaza

தற்போது பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் தமிழ்நாடு அரசின் உறுதி மொழி ஆய்வுக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார் வேல்முருகன். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அரசு பணிகளை இந்த குழு ஆய்வு செய்து வருகிறது. இக்குழுவானது இன்று கடலூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் வேல்முருகனை வரவேற்றனர்.

TN Govt assurances committee head Velmurugan orders not collect Tax in Kallakurichi Toll Plaza

இப்பயணத்தின் போது கள்ளக்குறிச்சி சுங்க சாவடி ஊழியர்கள், தமிழ்நாடு அரசின் உறுதி மொழி ஆய்வுக் குழுவினரிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுங்கச் சாவடியில் கீழே இறங்கிய வேல்முருகன், அங்கு விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் அரசு உறுதி மொழி ஆய்வுக் குழு தமது ஆய்வை முடித்துவிட்டுச் செல்லும் வரை கள்ளக்குறிச்சி சுங்க சாவடியில் எந்த ஒரு வாகனத்துக்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டார். இதனையடுத்து கள்ளக்குறிச்சி சுங்க சாவடியில் பல மணிநேரமாக வாகனங்கள் கட்டணம் செலுத்தாமலேயே சென்று வருகின்றன.

TN Govt assurances committee head Velmurugan orders not collect Tax in Kallakurichi Toll Plaza
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+