16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு உறவு கொள்வது குற்றமல்ல.. அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை!
16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு உறவு கொள்வது குற்றமல்ல என்ற சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை: 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு உறவு கொள்வது குற்றமல்ல என்ற சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
போக்ஸோ சட்டம் சிறுவர் மற்றும் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதற்கு எதிரான சட்டம் ஆகும். இதன்படி 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் உறவு கொள்வது தவறானது. இந்த நிலையில் இதை எதிர்த்து நாமக்கல்லை சேர்ந்த சபரிநாதன் என்பவர் வழக்கு தொடுத்தார்.

பாலியல் உறவு கொள்வதற்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். இதன் மூலம் பாலியல் குற்றங்கள் குறையும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் தற்போது இது தொடர்பாக முக்கிய பரிந்துரை ஒன்றை செய்துள்ளது. அதன்படி 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு உறவு கொள்வது குற்றமல்ல என்ற சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
போக்ஸோ சட்டத்தில் சிறுமிகள் வயது வரையரையை 18 ல் இருந்து 16 வயதாக குறைக்க வேண்டும். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பரஸ்பரம் உறவு கொண்டால் போக்ஸோ சட்டத்தில் இருந்து விலக்களிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இதை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications