கஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை கணக்கெடுப்பு பணிகள் சரிவர நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை கணக்கெடுப்பு பணிகள் சரிவர நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக அறிக்கையின் வாயிலாக அரசுக்கு தினகரன் கோரிக்கை விடுத்து வருகிறார். நாள் தோறும் எழும் கோரிக்கைகளை அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு, அரசுக்கு தெரிவுப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில், கிராம நிர்வாக அலுவலர்களுகாக அவர் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
|
அரசுக்கு கோரிக்கை
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய இடம் வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் சொந்த மாவட்டத்திலேயே பணிபுரிந்தால் தான், பணியில் பெரும்பான்மையான நேரம் இருக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான இடமாறுதலுக்கான கவுன்சிலிங் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
|
6 ஆண்டுகளாக நடக்கவில்லை
பணிமாறுதலுக்கான கவுன்சிலிங் 6 ஆண்டுகளாக நடக்கவில்லை. அரசு வழங்கிய லேப்டாப் பழுதானதை சரிசெய்ய உதவவில்லை. இணையதள வசதிக்கு தாங்களே செலவு செய்துவருவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக செய்தி வந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
|
பணிகள் சரிவர நடக்கவில்லை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை கணக்கெடுப்பு பணிகள் சரிவர நடக்கவில்லை என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், இவர்களின் போராட்ட அறிவிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கும். ஆகவே, அவர்களை அழைத்துப் பேசி இப்பிரச்சனைக்கு அரசு உடனடி தீர்வு காணவேண்டும்.

தினகரன் ட்வீட்
முன்னதாக, கஜா புயலால் பல லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து, பல்லாயிரம் விவசாயிகளை நிற்கதியாக்கியிருக்கிறது. இந்த பாதிப்பால் நிலைகுலைந்து போயுள்ள விவசாயிகளை மேலும் வேதனைப்படுத்தும் விதமாக ஒரு தென்னை மரத்திற்கு 1100 ரூபாய் மட்டுமே இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் வாழ்க்கையையே ஒரு புயலில் இழந்துள்ள இந்த விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
-
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications