அடி தூள்! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ‘டபுள்’ ட்ரீட்.. பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி அரசாணை!
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பண்டிகை கால தேவைகளை கருத்தில் கொண்டு, அவர்கள் பெறும் முன்பணத்தின் அளவை டபுள் மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக இரட்டிப்பாக உயர்த்தப்படும் என்றும் பொங்கல் போனஸ் மற்றும் சி, டி பிரிவு ஓய்வூதியம் ரூ.1,000 ஆக அதிகரிக்கப்படும் என்றும் அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
பண்டிகைகால முன்பணம் உயர்வு
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, பண்டிகை கால முன்பணம் தற்போது வழங்கப்பட்டு வந்த ரூபாய் 10,000 லிருந்து ரூ 20,000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு, எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் நிதியுதவியாக அமையும்.
பண்டிகை அட்வான்ஸ்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் பல்வேறு முக்கிய பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகைக் காலங்களில் ஏற்படும் அதிகரித்த செலவுகளை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு முன்பணம் வழங்கும் நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவினங்களின் அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த முன்பணத்தின் அளவை உயர்த்த வேண்டியது அவசியமாக இருந்தது.
அதன் அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை முழுமையாக உணர்ந்து, பண்டிகை கால முன்பணத்தின் அளவை தமிழக அரசு தற்போது இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த உயர்வு, ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பண்டிகைகளை மகிழ்ச்சியுடனும், எவ்வித நிதி நெருக்கடியும் இல்லாமலும் கொண்டாட வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பணியாளர்களின் மன உறுதியையும், அர்ப்பணிப்பையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
பண்டிகை கால முன்பணம் தற்போது ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்னர் வழங்கப்பட்ட ரூ.10,000 தொகையை விட இரு மடங்கு அதிகம். இந்த அதிகரிப்பு, பண்டிகைக் கால செலவுகளை சமாளிக்க ஊழியர்களுக்கு கணிசமான உதவியாக இருக்கும்.
யாருக்கெல்லாம் டபுள் சந்தோஷம்?
இந்த உயர்த்தப்பட்ட முன்பணம் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பொருந்தும். அனைத்து நிரந்தர அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், தகுதி வாய்ந்த அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் இதன் மூலம் பயன் பெறலாம்.
அட்வான்ஸ் பெற விண்ணப்பிக்க
பண்டிகை கால முன்பணம் பெற விரும்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் அலுவலகத் தலைவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளிடம் உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில், ஊழியரின் பெயர், பதவி, பணிபுரியும் துறை, பண்டிகையின் பெயர் மற்றும் தேவையான முன்பணத்தின் அளவு போன்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
வழங்கப்பட்ட முன்பணத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது மாதாந்திர சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும். பொதுவாக, இந்தத் தவணை காலம் ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை இருக்கலாம். சரியான நேரத்தில் முன்பணத்தை திருப்பிச் செலுத்துவது, எதிர்காலத்தில் மீண்டும் முன்பணம் பெறுவதற்கான தகுதியை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications