போனஸ் ஓகே.. தீபாவளியை முன்னிட்டு.. அடுத்த மாத சம்பளத்தையும் முன்கூட்டியே தர தமிழக அரசு திட்டம்?
சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில்.. கூடவே சம்பளம் தொடர்பான அறிவிப்பும் வரலாம் என்கிறார்கள். அதாவது அடுத்த மாதம் சம்பளம் 1ம் தேதிக்கு பதிலாக இந்த மாதம் 28ம் தேதி.. அதாவது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பே வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறதாம். இதை பற்றி விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் என்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வும் மேற்கொள்ளப்பட உள்ளது. அகவிலைப்படி இரண்டாவது முறையாக அக்டோபர் மாதம் உயர்த்தப்பட வேண்டும். 4% வரை இந்த முறை அகவிலைப்படி உயர்வு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போனஸ் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு இரண்டும் ஒன்றாக வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 50% அகவிலைப்படி கடைபிடிக்கப்படுகிறது. அதாவது அடிப்படை சம்பளத்தில் 50% அகவிலைப்படி கடைபிடிக்கப்படுகிறது. தற்போது 4% மேலும் உயர்த்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போனஸ் எவ்வளவு?: அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அகவிலைப்படி எப்போது உயர்த்தப்படும் என்பது தொடர்பான விவகாரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உற்பத்தித் துறை, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு. பொறியியல், மருந்துகள், ஆடைகள், தோல் பொருட்கள், தொழில்நுட்பம், சேவை போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை மாநிலங்களுள் குறிப்பாக தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலை ஊழியர்களின் எண்ணிக்கையிலும் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் திறன்மிக்க தொழிலாளர்களின் அயராத உழைப்பு மற்றும் அரசின் தொலைநோக்கு கொண்ட திட்டங்கள் இணைந்து, தமிழகம் இந்தியாவின் முன்னணி உற்பத்தி மையமாக மாறி வருவதுடன் 2030 ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் அமெரிக்க டாவர்" பொருளாதாரத்தை (one trillion economy) நோக்கி பயணிக்கிறது. தொழிலாளர்களின் சக்தி தான் ஒரு நாட்டை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டும்.
உற்பத்தியைப் பெருக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் அதிக பங்கு வகிக்கும் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 இன் படி, மிகை ஊதியம் பெறத் தருதியான சம் உச்சவரம்பு ரூ.21,000 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பமான ரூ.21,000 என்பதைத் தளர்த்தி அனைத்து C மற்றும் 'பிரிவு பணியாளர்களுக்கு 2023-24ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும். கபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
2. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுறியும் தகுதியுடைய மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் 3. பரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் C பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகைஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். 4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு இந்த சம்பள உயர்வு வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications