காவிரி ஆணைய கூட்டம்: மேகதாது குறித்து விவாதிக்க தமிழக அரசு எதிர்ப்பு- சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல்
சென்னை: டெல்லியில் நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் தொடர்பாக விவாதிக்க தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜூன் 17-ந் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டுகிற கர்நாடகாவின் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், மேகதாது அணை குறித்து விவாதிக்கவோ, அதற்கு ஒப்புதல் அளிக்கவோ காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்படக் கூடாது. வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இருந்து மேகதாது விவகாரம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும். அதேபோல், மத்திய அரசும் மேகதாது வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

தமிழக அரசு நிலை
இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த போது, மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடகா கைவிட ஆலோசனை வழங்க கேட்டுக் கொண்டார். பின்னர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த போது மேகதாது அணைக்கு அனுமதி தரக் கூடாது என நான் வலியுறுத்தினேன்.

மத்திய அரசு உறுதி
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 12-ந் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அனைத்து கட்சி உறுப்பினர்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கடந்த ஆண்டு ஜூன் 16-ல் நேரில் வழங்கினர். அப்போது தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த அனுமதியும் மேகதாது திட்டத்துக்கு அளிக்கமாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டது.

பிடிவாத கர்நாடகா
ஆனால் கர்நாடகா அரசு பட்ஜெட்டில் மேகதாது அணைக்கு ரூ1,000 கோடி நிதி ஒதுக்கியது. இதை எதிர்த்து தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மேகதாது விவகாரம் உச்சநீதிமன்றம் நிலுவையில் உள்ளதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் இதனை விவாதிக்கக் கூடாது என வலியுறுத்தினோம். அதனால் இந்த விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

காவிரி ஆணையம் வரம்பு மீறல்
இந்நிலையில் வரும் 17-ந் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என கடந்த மே 25-ல் கடிதம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4-ந் தேதி தமிழக அரசு தமது கடிதத்தில், மேகதாது குறித்து விவாதிக்க அதிகாரம் உள்ளது என்பது உச்சநீதிமன்றம் 18.05.18 உத்தரவுக்கும், மத்தியரசின் காவிரி ஆணைய வரம்புகள் குறித்த அறிவிப்புக்கும் எதிரானது; ஆகையால் இதனை விவாதப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் எதிர்ப்பும் வழக்கும்
மேலும் தமிழக அரசின் உறுப்பினர் நடைபெற உள்ள 16-வது கூட்டத்தில், மேகதாது அணை குறித்த விவாதப் பொருள், ஆணைய எல்லைக்கு அப்பாற்பட்டு உள்ளது; இது குறித்து விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை உறுதியுடன் தெரிவிப்பார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் வரம்பை மீறி மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்க கூடாது என ஆணையிட வேண்டி உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசால் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து காவிரி பாசன விவசாயிகள், தமிழக மக்கள் நலன்கள், உரிமைகளை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை உறுதியுடன் எடுக்கும். இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications