அடியோடு மாறுது.. கிண்டிக்கு வரும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.. அரசாணை வெளியீடு!
சென்னை: சென்னை ஆட்சியர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே ராஜாஜி சாலை, சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வரும் ஆட்சியர் அலுவலகம், கிண்டிக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டி ரேஸ் கிளப் வளாகத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
தென்சென்னை வருவாய் கோட்டத்தில் உள்ள கிண்டியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட 1.43 ஹெக்டேர் நிலத்தினை வருவாய் துறைக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு, புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் இயங்கி வருகிறது. இந்த மாளிகையில் 10 நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வளாகத்தில் புதிய பல அடுக்கு நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளதால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராஜாஜி சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான இடநெருக்கடிகள் மற்றும் போக்குவரத்து சிக்கல்களை மீண்டும் மீண்டும் மதிப்பாய்வுகள் செய்து எடுத்துக்காட்டியதை அடுத்து, அதிகாரிகள் இந்த மாற்றத்தை முடிவு செய்துள்ளனர்.
கூட்ட நெரிசல்
ஒவ்வொரு நாளும் 2,000 க்கும் மேற்பட்ட மனுக்கள் மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படுகின்றன. இதனால் எந்த நேரமும் அதிக கூட்டம் இருக்கும். இந்த வளாகம் எப்போதுமே கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் குறைகள், நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகப் பணிகளை சீராகக் கையாள்வதைத் தடுக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
கிண்டியில் அமைய உள்ள புதிய ஆட்சியர் அலுவலகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒன்றிணைத்து, பொது காத்திருப்பு அரங்குகள், விசாரணை அறைகள் மற்றும் டிஜிட்டல் சேவை கவுண்டர்கள் போன்ற மேம்பட்ட வசதிகள் கொண்டதாக இருக்கும்.
கிண்டியில் புதிய ஆட்சியர் அலுவலகம்
அதன்படி, கிண்டியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்ட தேவையான 1.43 ஹெக்டேர் நிலத்தினை வருவாய் துறைக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அரசாணைப்படி நில ஆவணங்களில் ஒரு மாதத்திற்குள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிண்டியில் உள்ள இடம் சிறந்த சாலை, ரயில் மற்றும் மெட்ரோ இணைப்புடன் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில் இருப்பதாக கருதப்படுகிறது. கிண்டியில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் முடியும் வரை எம். சிங்காரவேலர் மாளிகையில் தற்போதைய செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications