“தீபம் ஏற்ற வந்தமாதிரி தெரியல.. சொத்தில் உரிமை கேட்பது போல வந்துள்ளார்”.. அரசு தரப்பு வைத்த வாதம்!
மதுரை: "மனுதாரர் இந்த வழக்கில் பக்தராக வரவில்லை. சொத்தில் உரிமை கேட்பது போல வந்துள்ளார். இது தீபம் ஏற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கா அல்லது சொத்துரிமை கேட்டு தொடரப்பட்ட வழக்கா எனத் தெரியவில்லை" என திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பு வாதம் வைத்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாம்கிநாதன் உத்தரவுப்படி தீபம் ஏற்றுவதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோர் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி இறுதி வாதத்தை முன்வைத்தார்.
"மனுதாரர் இந்த வழக்கில் பக்தராக வரவில்லை. சொத்தில் உரிமை கேட்பது போல வந்துள்ளார். இது தீபம் ஏற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கா அல்லது சொத்துரிமை கேட்டு தொடரப்பட்ட வழக்கா எனத் தெரியவில்லை" என அரசுத் தரப்பு வழக்கறிஞர் இன்று வாதங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்த அரச பாண்டி தரப்பு, ராம ரவிக்குமார் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிக்கந்தர் தர்காவில் அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. அதைப்போன்று கோவில் நிர்வாகம் சார்பில் இங்கு தீபம் ஏற்ற வேண்டும் என வாதத்தை முன்வைத்தனர்.
அதைத்தொடர்ந்து, தர்கா தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தில், இதுபோன்ற விவகாரங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது 2 நீதிபதிகள் அமர்வு.
மேலும், தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமான வாதங்களை நாளைக்குள் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications