வண்டலூர் பூங்காவில் உணவின்றி தவித்த வாயில்லா ஜீவன்கள்.. ரூ.6 கோடியை அள்ளித் தந்த தமிழக அரசு!
சென்னை: சென்னை புறநகரில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வன உயிரினங்களுக்கு உணவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு நிதியை அரசு வழங்கியுள்ளது.
இதனிடையே இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு காரணமாக, 20.04.2021 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்காக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது என முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு காப்பாளரும் தெரிவித்தனர். 2021-2022 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மறு அறிவிப்பு வரை அனைத்து விலங்கியல் பூங்காக்களும் மூடப்பட்டிருப்பதால், உயிரியல் பூங்காக்களின் வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளது.

வருவாய் இல்லை
பெறப்பட்ட வருவாயின் பெரும்பகுதி நடப்புக் கணக்கிலிருந்து அந்த ஆண்டின் வருடாந்திர செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. கடந்தாண்டு மார்ச் 31 நிலவரப்படி தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தில் உள்ள மொத்தத் தொகை ரூ.6,02,58,474 என்று முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் தெரிவித்துள்ளார். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் வழக்கமான மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்ச மாதச் செலவு ரூ.128 லட்சம் ஆகும்.

அரசுக்கு கோரிக்கை
தேவையான நிதி கிடைக்காத பட்சத்தில், மிருகக்காட்சிசாலையில் உள்ள காடுகளை நிர்வகித்தல் மற்றும் நிறுவனத்தை செயல்படுத்துவதில் மிருகக்காட்சிசாலை கடுமையான சிக்கலை சந்திக்க நேரிடும். எனவே, இந்த சிறப்பு நிதியை தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் கணக்கில் டெபாசிட் செய்யும் வகையில், உயிரியல் பூங்காவை முறையாகச் செயல்படுத்த, அத்தியாவசியப் பொருட்களைச் சமர்ப்பிப்பதற்கான செலவினங்களுக்காக, 7 கோடி ரூபாயை உடனடியாக வழங்குமாறு, முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பரிசீலனை
தமிழக அரசு இதனை பரிசீலித்த பிறகு, 2021-22 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு உணவுக் கட்டணம் மற்றும் இதர அத்தியாவசிய செலவுகள் போன்றவற்றிற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications