பல்கலைக் கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும்- முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழக பல்கலைக் கழக துணை வேந்தர்களை மாநில அரசே இனி நியமனம் செய்யும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாதது; ஆட்டுக்கு தாடி போல என விமர்சித்து கலகக் குரல் எழுப்பிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான். ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறவர். மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுபவர்.
ஆனால் பல்வேறு மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் நிர்வாகத்தில் ஆளுநர்கள் தலையிடுவதால் பெரும் சர்ச்சைகள் தொடரவே செய்கின்றன. தற்போதைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்த போது அம்மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட்டதால் பிரச்சனை எழுந்தது.

மாநில அரசுகள்- ஆளுநர்கள் மோதல்
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டதை நாகாலாந்து மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் ஆளுநருக்கும் இடையே உக்கிர மோதல் நிலவுகிறது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், டெல்லி என பல மாநிலங்களில் அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையேயான மோதல் தொடருகிறது.

மகாராஷ்டிரா தீர்மானம்
நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக மாநில ஆளுநர்கள் இருந்து வருகின்றனர். இதனால் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர்தான் நியமித்து வருகிறார். இந்த நியமனம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இதனால் ஆளுநர் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மேற்கொண்டார். மகாராஷ்டிரா சட்டசபையிலேயே ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பஞ்சாப் கேரளாவில் மோதல்
பஞ்சாப் மாநில ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி கூறியுள்ளார். கேரளாவில் கண்ணூர் பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

முதல்வர் அதிரடி அறிவிப்பு
மேலும் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்கும் தமிழகத்திலும் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்டசபையில் பாமக தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும்; இது தொடர்பாக மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications