மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்
சென்னை: மும்மொழிக் கொள்கையில் தமிழக அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பது குறித்து முதலமைச்சர் நாளை மறுநாள் அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விகொள்கையை அமல்படுத்துவது குறித்து பொது மக்களின் கருத்து கேட்பதற்காக புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இனி மாணவர்களுக்கு மும்மொழிக்கொள்கை கட்டாயம் ஆக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இது தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பை பார்த்த மத்திய அரசு இந்தி கட்டாயம் இல்லை என்று கூறியது. ஆனால் மும்மொழிக் கொள்கையில் இருந்து மத்திய அரசு பின்வாங்கவில்லை. இதனால் தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக கல்வியாளர்கள் இரு மொழிக் கொள்கையே போதுமானது, அதுவே தமிழக அரசின் கொள்கையும் கூட என்று கூறிவருகிறார்கள்.
அதோடு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் நடைமுறையில் உள்ள இரு மொழிக் கொள்கையே போதுமானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மூன்றாவது மொழி வேண்டாம் என்ற கருத்தே தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. இந்நிலையில் புதியக் கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கையில் தமிழக அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பது குறித்து இதுவரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதவுள்ளார். அதோடு மும்மொழி கல்வி கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதல்வர் நாளை மறுநாள் அறிவிப்பார், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வருவது குறித்தும் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது. 1 லட்சத்து 53 ஆயிரத்து 359 மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க அரசு ஆணை வெளியிட்டது. கடந்த 2016-17, 2017-18 மற்றும் 2018 19 ல் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கப்படும். 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் .
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications