மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்
சென்னை: மும்மொழிக் கொள்கையில் தமிழக அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பது குறித்து முதலமைச்சர் நாளை மறுநாள் அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விகொள்கையை அமல்படுத்துவது குறித்து பொது மக்களின் கருத்து கேட்பதற்காக புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இனி மாணவர்களுக்கு மும்மொழிக்கொள்கை கட்டாயம் ஆக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இது தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பை பார்த்த மத்திய அரசு இந்தி கட்டாயம் இல்லை என்று கூறியது. ஆனால் மும்மொழிக் கொள்கையில் இருந்து மத்திய அரசு பின்வாங்கவில்லை. இதனால் தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக கல்வியாளர்கள் இரு மொழிக் கொள்கையே போதுமானது, அதுவே தமிழக அரசின் கொள்கையும் கூட என்று கூறிவருகிறார்கள்.
அதோடு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் நடைமுறையில் உள்ள இரு மொழிக் கொள்கையே போதுமானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மூன்றாவது மொழி வேண்டாம் என்ற கருத்தே தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. இந்நிலையில் புதியக் கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கையில் தமிழக அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பது குறித்து இதுவரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதவுள்ளார். அதோடு மும்மொழி கல்வி கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதல்வர் நாளை மறுநாள் அறிவிப்பார், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வருவது குறித்தும் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது. 1 லட்சத்து 53 ஆயிரத்து 359 மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க அரசு ஆணை வெளியிட்டது. கடந்த 2016-17, 2017-18 மற்றும் 2018 19 ல் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கப்படும். 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் .
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications