9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக அனிஷா ஹுசைன் நியமனம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக அனிஷா ஹுசைன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு காவல்துறையில் அவ்வப்போது முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்தவகையில் இன்று, தமிழ்நாடு முழுவதும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருட்டுத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ் அதிகாரி அனிஷா ஹுசைன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக எஸ்.லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு வடக்கு இணை கமிஷனராக சோனல் சந்திரா நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை மாநகர சிபிசிஐடி கண்காணிப்பாளராக ஜி.ஜவகர் நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை பெருநகர போக்குவரத்து துணை கமிஷனராக ஆர்.சுகாஸினி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை காவல் தலைமையக துணை கமிஷனராக திவ்யா (பதவி உயர்வு) நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை பெருநகர தெற்கு போக்குவரத்து காவல் இணை கமிஷனராக பி.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பதவி உயர்வில் சிபிசிஐடி ஒருங்கிணைப்பு எஸ்பியாக ஷாஜிதா நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக பண்டி கங்காதர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.













Click it and Unblock the Notifications