தமிழகத்தில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்- பத்திரிகையாளர்களிடம் உறுதி தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று தம்மை சந்தித்த பத்திரிகையாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவர் என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், நக்கீரன் வார இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் லட்சுமி சுப்பிரமணியன், இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் பீர் முகமது ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர் பத்திரிகையாளர்கள்.
அப்போது, தமிழகத்தில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றும் பத்திரிகையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications