தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்.. இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
2-ம்கட்ட வாக்குபதிவு இன்று தொடங்கியது
சென்னை: உள்ளாட்சி தேர்தலின் 2-ம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி உள்ளது.. 35 ஒன்றியங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது... அமைதியான முறையில் பொதுமக்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

வாக்குப்பதிவு
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12,376 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அறிகுறி
அதன்படி, காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி உள்ளது.. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.. இதில், மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்..

போலீஸ்
2ம் கட்ட வாக்குப்பதிவின்போது போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்பட 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த 2 கட்டத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, வரும் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.முன்னதாக, இதற்காகவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.

வழிபாடு
விழுப்புரம் மாவட்டத்தில், இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி, கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது... மதுரை திருமங்கலத்தில் இடைத்தேர்தலையொட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.. அப்போது, ஊழியர்கள் வாக்குப்பெட்டிகளுக்கு பூஜை செய்து, தேங்காய் உடைத்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

வாக்களித்தார்
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "பத்தாண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குச்சீட்டு முறையில் மக்கள் புரிதலுடன் வாக்களித்து வருகின்றனர்.இது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.. இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் 10 மணியளவில் வாக்குப்பதிவு நடைபெறுவதை வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆய்வு செய்யயுள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications