தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்.. இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
2-ம்கட்ட வாக்குபதிவு இன்று தொடங்கியது
சென்னை: உள்ளாட்சி தேர்தலின் 2-ம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி உள்ளது.. 35 ஒன்றியங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது... அமைதியான முறையில் பொதுமக்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

வாக்குப்பதிவு
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12,376 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அறிகுறி
அதன்படி, காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி உள்ளது.. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.. இதில், மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்..

போலீஸ்
2ம் கட்ட வாக்குப்பதிவின்போது போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்பட 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த 2 கட்டத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, வரும் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.முன்னதாக, இதற்காகவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.

வழிபாடு
விழுப்புரம் மாவட்டத்தில், இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி, கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது... மதுரை திருமங்கலத்தில் இடைத்தேர்தலையொட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.. அப்போது, ஊழியர்கள் வாக்குப்பெட்டிகளுக்கு பூஜை செய்து, தேங்காய் உடைத்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

வாக்களித்தார்
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "பத்தாண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குச்சீட்டு முறையில் மக்கள் புரிதலுடன் வாக்களித்து வருகின்றனர்.இது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.. இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் 10 மணியளவில் வாக்குப்பதிவு நடைபெறுவதை வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆய்வு செய்யயுள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications