இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
சென்னை: முஸ்லிம்கள் சொத்து சேர்க்க காங்கிரஸ் கட்சி உதவி செய்திருந்தால், நாட்டில் அதிக பணக்காரர்களாக முஸ்லிம்கள்தானே இருக்க வேண்டும்? இந்தியாவில் உள்ள 4 பணக்காரர்களில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லையே ஏன்? என்று திருச்சி வேலுச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு நாடு தயாராகி வருகிறது.

ஆகவே, வடமாநிலங்களில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நேரத்தில் பாஜக தனது பழைய பிரச்சார யுக்தியை மாற்றியுள்ளது. மத ரீதியான தாக்குதல்களில் பாஜக இறங்கி உள்ளது.
நேரடியாக இஸ்லாமியர்களை குறிவைத்து மோடி பேச தொடங்கி உள்ளார். பழைய மோடி மீண்டும் வெளிப்படுகிறார் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்
ராஜஸ்தானில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
அடுத்ததாக, இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது என்றார் மோடி.
மறுபடியும் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது என்று மத ரீதியான தாக்குதலை நடத்தி இருந்தார் மோடி.
இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. காங். தேர்தல் ஆணையத்திடம் மோடி பேச்சு குறித்து புகார் அளித்துள்ளது.
இந்நிலையில் மோடியின் பேச்சு குறித்து சில கேள்விகளை முன்வைத்துள்ளார் காங். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி வேலுச்சாமி. அவர் இது தொடர்பாக ஒரு யூடியூப் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் வேலுச்சாமி, "இந்த நாட்டை அதிக காலங்கள் ஆண்டது காங்கிரஸ் கட்சிதான். மோடி ஒரு 10 ஆண்டு காலம் ஆண்டுள்ளார். வாஜ்பாய் 7 ஆண்டு காலம். மொத்தம் 17 வருட பாஜக ஆட்சி. அதைவிட்டால் அதிக வருடங்கள் இந்த நாட்டை காங்கிரஸ்தான் ஆண்டு உள்ளது.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. மோடி சொல்வதைப் போன்று முஸ்லிம்கள் சொத்து சேர்ப்பதற்கு காங்கிரஸ் உதவி செய்திருந்தால், இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் பணக்காரர்களாகி இருப்பார்கள்.
இந்த நாட்டில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக உள்ள சில பெயர்களை எடுத்துக் கொள்வோம். அதானி, அம்பானி எல்லாம் இன்றைக்கு வந்தவர்கள். அதற்கு முன்னால் இருந்தவர்கள் டாடா, பிர்லாதான். இந்த 4 கோடீஸ்வரர்களைத் தாண்டி இந்தியாவில் பெரிய பணக்காரர்கள் இல்லை.
அப்படிப் பார்த்தால் இந்த 4 பேரில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லையே? இந்த நாட்டு மக்களைப் பற்றி மோடி என்ன நினைத்திருக்கிறார். என்ன சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைத்துப் பேசுகிறாரா?

அதிக ஓட்டுகளை வாங்க வேண்டும் என்று நினைத்தால் காங்கிரஸ் கட்சி இந்துக்களைத்தானே தாஜா செய்யும். குறைவான வாக்குகளை வைத்துள்ள முஸ்லிம் மக்களையா தாஜா செய்யும்? மோடியின் பேச்சில் லாஜிக்கே இல்லையே?
அவர் முதல் கட்ட தேர்தல் முடிந்த பிறகு நிறையவே உளற ஆரம்பித்திருக்கிறார். அவருக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. அது அவரது பேச்சை வைத்தே புரிந்துகொள்ள முடிகிறது" என்று கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications