கறுப்பர் கூட்டம்- தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி நன்றி
சென்னை: கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.பி. வேலுமணி பதிவிட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் யாராயினும் அரசியல் செய்யாமல் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு அமைதியை நிலைநாட்டி வருகிறது.

அவ்வகையில் கவசமாக இருந்து காக்க என்று கந்தர் அருள்வேண்டி கோடிக்கணக்கான தமிழர்கள் பாடும் பாடலை நிந்தனை செய்தோர் மீதும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றோர் மீதும் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டு தெரிவித்து, பாகுபாடு இல்லாத சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள திரு. @rajinikanth அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications