கர்நாடகா ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு கண்டனம்- தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம்
சென்னை: கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னை, வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை செல்லும் எனவும் கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வண்ணாரப்பேட்டை பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் சார்பாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட குழந்தைகள் ஆண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் காவல் துறை சார்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம்
வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அனைத்து இஸ்லாமியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ஷம்சுல் ஹுதாபாகவி தலைமையில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை விதித்தை திரும்ப பெற கோரியும் இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும் மத உரிமையில் தலையிடுவதை கைவிட வலியுறுத்தியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவர் இக்பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . அடுத்த கட்டமாக மத உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்ட போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தனர். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று போராட்டம் நடைபெற்றது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications