Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்குச்சாவடிக்குள் புகுந்து ரகளை! இவிஎம் இயந்திரங்களை உடைத்த திமுகவினர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை திமுக நபர்கள் உடைத்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

மாநிலத்தில் நேற்று ஆங்காங்கே சிறு சிறு பூசல்கள் ஏற்பட்டாலும் கூட, பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. மோதல் ஏற்பட்ட இடங்களில் விரைந்து சென்ற போலீசார் நடவடிக்கை எடுத்ததால், எங்கும் பெரியளவில் பிரச்சினை ஏற்படவில்லை. இதனால் மாலை 6 மணி வரை பொதுமக்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

 பயங்கர ஆயுதங்கள்

பயங்கர ஆயுதங்கள்


இதனிடையே நேற்று சென்னையில் வாக்குச்சாவடி மையத்தில் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது சென்னை ஒடைக்குப்பம் 179 வார்டு பகுதியில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசன் என்பவரும் தி.மு.க சார்பில் கயல்விழி என்பவரும் போட்டியிட்டனர். நேற்று மாலை வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே சிலர் பயங்கர ஆயுதங்களுடன் வாக்குப்பதிவு மையத்திற்கு நுழைந்துள்ளனர்.

 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேசம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேசம்

கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள், வாக்குப்பதிவு மையத்தில் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அங்கிருந்த வாக்காளர்களை உடனடியாக வெளியேறும்படி கூறி மிரட்டி தகராற்றில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்து போலீசார் அங்குச் செல்வதற்குள், தகராறு செய்தவர்கள் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வாக்குச்சாவடியில் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சேதப்படுத்தியது திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த கதிர் என்ற திமுக பிரமுகர் என்பதும் அவர் தான் அடியாட்களுடன் வந்து தகராற்றில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து கதிர் (எ) கதிரவன் மற்றும் அவருடன் வந்த நபர்கள் மீது அரசு சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்து அமைதியைச் சீர்குலைத்தல் உள்ளிட்ட 3 மூன்று பிரிவுகளின் கீழ் திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள கதிர் (எ) கதிரவன் மற்றும் அவருடன் வந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+