தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 185; சென்னையில் 94 பேருக்கு தொற்று!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 185 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகபட்சமாக 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் புதியதாக உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முக கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படுகின்றன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32,498 என்றும் கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.08 சதவிகிதமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.71 சதவீதம் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் 3,591 பேர் குணமடைந்துள்ளனர்; இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,40,301 என அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 7,240 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.13 சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 1.31 சதவீதம் ஆகும். இதுவரை மொத்தம் 85.38 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,40,615 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150ஐ தாண்டியதாக தொடர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 195 ஆக இருந்தது. இன்று இது 185 ஆக உள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து இன்று 129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1077; தமிழகத்தில் சென்னை- 94; செங்கல்பட்டு 24; காஞ்சிபுரம் 19; கோவை மாவட்டத்தில் 9 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications