தமிழகம்- மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- இன்று 195 பேருக்கு தொற்று உறுதி- உயிரிழப்பு இல்லை!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் தமிழகத்தில் இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.
நாட்டில் பொதுவாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28,857; கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.07 சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.72 சதவீதம் ஆகும். இன்று காலையுடனான 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,345 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,36,710 என அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு
அதேநேரத்தில் இன்று காலையுடனான 24 மணி நேரத்தில் 5,233 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.67 சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 1.12 சதவீதம் ஆகும். இதுவரை மொத்தம் 85.35 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,13,361 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று 195 பேருக்கு பாதிப்பு
இந்த நிலையில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வழக்கமான அறிக்கையை மாலை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 144 ஆக இருந்தது; இன்று 13,728 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 927-ல் இருந்து 1021 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 34,56,512 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 6,55,53,236 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் இன்று 101 பேர் வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,17,466 ஆகும். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,025. தமிழக மாவட்டங்களில் சென்னையில் அதிக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 95 பேருக்கு கொரோனா உறுதியானது. செங்கல்பட்டில் 23 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 30 பேருக்கும் கோவையில் 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications