ஐ.நா. மனித உரிமைகள் சபை: இலங்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா- தமிழர் தலைவர்கள் கடும் கண்டனம்
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான 6 நாடுகள் தீர்மானம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்காதது மன்னிக்க முடியாத துரோகம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
இலங்கை இறுதி யுத்தத்தின் போது சிங்கள ராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவை என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை. இதனையே சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் வலியுறுத்துகின்றனர்.

6 நாடுகளின் தீர்மானம்
இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டங்களில் தீர்மானங்கள் கொண்டுவருவதும் அதில் இலங்கை தொடர்ந்து வெற்றி பெறுவதும் வாடிக்கையான ஒன்று. இந்த நிலையில் தற்போதைய ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் பிரிட்டன் உட்பட 6 நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தன.

நிறைவேறிய தீர்மானம்
அதாவது மனித உரிமை மீறல்களை இலங்கை விசாரித்துதான் ஆக வேண்டும் என்பதுதான் இந்த தீர்மானத்தின் சாராம்சம். இதன் மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 21 நாடுகள் ஓட்டளித்தன. இலங்கையில் அப்படி ஒரு விசாரணையே தேவை இல்லை என சீனா, பாகிஸ்தான் உட்பட 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

ஆப்சென்ட் இந்தியா
இந்தியா, ஜப்பான் உட்பட 14 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இத்தனைக்கும் இன்று காலை ராஜ்யசபாவில், இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை வலியுறுத்தினார். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் இந்த விவகாரம் பிரச்சனையாகும் என்பதை யூகித்தே அதிமுக இதனை சுட்டிக்காட்டியது.

தமிழகம் அதிர்ச்சி
முன்னதாக தமிழக அரசியல் தலைவர்களான ப. சிதம்பரம், ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனாலும் தமிழகத்தின் குரலுக்கு இந்திய அரசு செவிவாய்க்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது. இது தமிழருக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications