ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தமிழக நீச்சல் வீரர்.. சென்னையில் சாலை விபத்தில் பலி
சென்னை: சென்னையில் பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஷெனாய் நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் டாக்டர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷணன். நீச்சல் வீரரான இவர், தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் தங்க பதக்கம் வென்றுள்ளார். குறிப்பாக கடந்த 2010ம் ஆண்டு நடந்த தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்தார்.

அமெரிக்காவில் பணியாற்றி வரும் பாலகிருஷ்ணன், சில தினங்களுக்கு முன்பு விடுமுறையை கழிக்க சென்னை வந்துள்ளார். நேற்று இரவு அரும்பாக்கத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற காங்கிரீட் கலக்கும் லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கினார். இதில் நிகழ்விடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மரூத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே கடந்த 2010ல் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இருந்தவர் பாலகிருஷ்ணனை அப்போது சிலர் பயங்கரமாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. அந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் இப்போது நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் விபத்தில் நேற்று உயிரிழந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications