1,200 மருத்துவ சீட் பறிபோகும் சூழல்.. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: மா சுப்பிரமணியன்
சென்னை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் 1200 முதுநிலை மருத்துவ இடங்கள் பறிபோகும் சூழல் உள்ளது என்றும், மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், சுதான்ஷு துலியா மற்றும் எஸ்.வி.என். பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையிலான இடஒதுக்கீடு (Residence based reservation) என்பது கூடாது என்றும், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறுவதாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உச்ச நீதிமன்றத்தின், இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு தொடர்பாகப் பேசினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை செய்யப்படும். இந்த தீர்ப்பின் நகல் வந்துள்ளது. அதனை வைத்து துறை அலுவலர்களுடன் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் எந்த இடத்திலும் பாதிக்கப்படக்கூடாது.
இந்த தீர்ப்பு முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசுப் பணியில் இருக்கக்கூடிய மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் முதுநிலை மருத்துவர் சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
அரசு மருத்துவர்களுக்கு, இட ஒதுக்கீட்டு முறையில் வழங்கப்படும் ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படும். சிறுபான்மையினர் நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் முழுமையாக பாதிக்கப்படும். இதன் காரணமாக 1,200 முதுநிலை மருத்துவ இடங்கள் தமிழகத்தில் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 69% இடஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மருத்துவ மேற்படிப்புகளில் கிட்டத்தட்ட 2,200-க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழக அரசின் வசம் இருக்கிறது. 1,200 முதுநிலை மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது. இந்த இடங்களைப் பறித்து மற்றவர்களுக்குத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுகிற சூழ்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் மாநில உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தின் உள் இட ஒதுக்கீடுகள் கேள்விக்குறியாகும். தமிழ்நாட்டில் மாநில உரிமைகள் எந்த இடத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
மற்ற மாநிலங்களுடன் இதுதொடர்பாக பேசுவதில் இருக்கும் சிரமம் என்னவென்றால், இங்கு BC,MBC, வகுப்பில் இடம்பெற்றுள்ள சமூகங்கள், மற்ற மாநிலங்களில் இருப்பது இல்லை. இங்கு சாதகமாக இருக்கும் அம்சங்கள் மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு பாதகமாக இருக்கும். நமக்கு பாதகமாக இருப்பவை அவர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே, இதில் மற்ற மாநிலங்களை ஒருங்கிணைப்பது சரியாக இருக்காது. தமிழகத்தின் உரிமைகள் பறிபோகக்கூடாது.
இந்தாண்டு சேர்க்கைக்கு இது பொருந்தாது என்று கூறியுள்ளனர். அடுத்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆனதுதான் இந்த தீர்ப்பு. அதற்குள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம் " எனத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications