Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் அரசு ஏ.சி பஸ்கள் எப்போது இயக்கப்படும்?.. 'ஜில்' அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு ஏ.சி பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி 2 மாதங்களுக்கு கொரோனா தொற்று பாடாய்படுத்தியது.

தினமும் 31,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று இக்கட்டான நிலை நிலவியது.

பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து சேவை நிறுத்தம்

இதனால் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு போடப்பட்டது. அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அரசு பேருந்து, தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாகவும், மக்களின் ஒத்துழைப்பு காரணமாகவும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது.

இயல்பு நிலை திரும்பியது

இயல்பு நிலை திரும்பியது

இதனால் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டன. முதலில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், அதன்பிறகு மற்ற மாவட்டங்களிலும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டது. இதேபோல் சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு விரைவு பேருந்து சேவை தொடங்கின.

அதன்பின்னர் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை சீரானது. முதலில் இரவு குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது.

கேரளாவுக்கு பஸ்கள் இல்லை

கேரளாவுக்கு பஸ்கள் இல்லை

இதனை தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறன. கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அண்டை மாநிலமான கேரளாவுக்கு மட்டும் பஸ்கள் நேரடியாக இயக்கப்படவில்லை. இதேபோல் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வந்த அரசு ஏ.சி பஸ்களும் இயக்கப்படவில்லை. சாதாரண பேருந்தை விட ஏ.சி பேருந்தில் சிறிது கூடுதலாக மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் ஏ.சி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஏ.சி பஸ்கள் இயக்கப்படும்

ஏ.சி பஸ்கள் இயக்கப்படும்

இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்றுள்ள தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு ஏ.சி பேருந்துகள் இயக்கப்படும் என்று குளிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 1-ம் தேதி முதல் 702 ஏ.சி பேருந்துகள் தமிழகத்துக்குள்ளும், வெளிமாநிலங்களுக்கும் இயக்கப்படும் என்று அவர் கூறி இருக்கிறார். அதன்படி தமிழகத்தின் சிறு நகரங்களுக்கு இடையேயும், சென்னை, கோவை போன்ற தொலைதூர நகரங்களுக்கு இடையேயும் ஏ.சி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் கேரளாவை தவிர கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் ஏ.சி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+