Exclusive: சென்னையில் திடீர் மழைக்கு காரணம் என்ன? அடுத்த மழை எப்போது?.. தமிழ்நாடு வெதர்மேன் பதில்!
சென்னை: சென்னையில் திடீரென மழை பெய்தது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டியது. பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில் இது திடீர் மழை அல்ல. பொதுவாக ஜூன் மாதம் சென்னையில் 60 மி.மீ. மழை பதிவாகும். அதை இந்த மாதம் பெற்றுள்ளோம்.

வளி மண்டல மேலடுக்கு
ஹைதராபாத் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மழை பெய்துள்ளது. மேலும் வடதமிழகத்தின் சென்னை பகுதியில் காற்று வீசியதாலும் இந்த மழை பெய்துள்ளது.

மேகக் கூட்டங்கள்
வடக்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேகக் கூட்டங்கள் நீண்ட நேரமாக இருந்தன. இதனால்தான் இன்று காலை 10 மணி வரை சென்னையில் மழைத் தூறல் இருந்தது. இதற்கு மேல் மழை பெய்யாது. ஜூன் 29, 30 ஆகிய தேதிகளிலும் மழை இருக்காது.

பிரதீப் ஜான்
பெரிய பெரிய மேகக் கூட்டங்கள் கலைந்து சென்றவுடன் சூரியன் மெல்ல எட்டிபார்க்கும். சென்னையில் அடுத்த மழை ஜூலை முதல் வாரத்தில் வெப்பச்சலனத்தால் ஏற்படும் என வெதர்மேன் பிரதீப் ஜான தெரிவித்துள்ளார்.

மழை
கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.












Click it and Unblock the Notifications