வள்ளலாரை சனாதன தர்மத்துக்குள் மீண்டும் விழுங்க வைப்பதா? ஆளுநர் ரவிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: தமிழகத்தில் மைக் கிடைத்தால் உடனே தமிழ்நாட்டில் ஆளும் அரசையும், சட்டம் ஒழுங்கு பற்றியும் பேசி இங்கே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார். மேலும் தாம் வகிக்கும் பொறுப்புக்கு தகுந்தாற் போல் பொது இடங்களில் பேச வேண்டுமென ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன் என்றும் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செல்வப் பெருந்தகை கூறியிருப்பதாவது: எல்லா உயிர்களையும் தன் உயிர் போலப் பார்க்க வேண்டும் என்பதைத் தான் திரும்ப திரும்பச் சொன்னவர் வள்ளலார்.

'சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச்சந்தடிகளிலே கோத்திரச்சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே!'
என்கிறார் வள்ளலார் இராமலிங்கர்.
'சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்' என்றவர் அவர்.
''மதித்த சமயமத வழக்கமெல்லாம் மாய்ந்தது வருணாசிரமம் என்னும் மயக்கமும் மாய்ந்தது' என்கிறார் வள்ளலார்.
வள்ளலார் உருவ வழிபாட்டில் இருந்து அருவ வழிபாட்டிற்கு வாருங்கள் என்றழைக்கிறார்.
இதில் இருந்தே வள்ளலார் சனாதன தர்மத்திற்கு எதிராக இருந்ததை அறிய முடியும்.
இப்படிச் சொன்ன வள்ளலாரை எப்படி சனாதன தர்மத்தை மீட்டுள்ளார் என்கிறார் ஆளுநர்.
வள்ளலாரை மீண்டும் மீண்டும் சனாதன தர்மத்திற்குள் விழுங்க வைக்க முயற்சி எடுக்கும் ஆளுநருக்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
'அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதமே மாத்ரு பாஷை' (அதாவது தாய் மொழி) என்றார் சங்கராச்சாரியார்.
'அப்படியானால் தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் பித்ரு பாஷை' (அதாவது தந்தை மொழி) என்றவர் இராமலிங்கர்.
சமஸ்கிருதத்தை உயர்த்தி தமிழை தாழ்த்தும் போது உடனடியாக வினையாற்றியவர் வள்ளலார்.
ஆளுநர் அவர்கள், வள்ளலாரைப் பற்றி முழுதாக அறிந்து, படித்து அவர் பற்றிய கருத்தை வெளியிட வேண்டும். யாரோ எழுதிக் கொடுத்து அதை மேடைகளில் பேசக்கூடாது.
மைக் கிடைத்தால் உடனே தமிழ்நாட்டில் ஆளும் அரசையும், சட்டம் ஒழுங்கு பற்றியும் பேசி இங்கே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஆளுநர்.
சமூகநீதியை தமிழ்நாட்டில் இரவும், பகலுமாக பேசி வருவதால் தான் விளிம்புநிலை மக்களுக்கும், சிறுபான்மை சமூகத்தினரும் பாஜக ஆளும் மாநிலங்களை விட இங்கே மிகவும் பாதுகாப்பாக உள்ளார்கள்.
இதையெல்லாம் ஆளுநர் சீர்தூக்கி பார்த்து, அவர் வகிக்கும் பொறுப்புக்கு தகுந்தாற் போல் பொது இடங்களில் பேச வேண்டுமென ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
-
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications