பி.இ., படிக்க அப்ளை பண்ணியிருக்கீங்களா? சர்டிபிகேட் அப்லோடு பண்ண இன்றே கடைசி நாள்
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசிநாளாகும். நாளை ரேண்டம் எண்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்றும் மாணவர்கள் தங்களின் சான்றிதழ் பதிவேற்றும் பணி ஜூலை 31ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

முதல் வாரத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அடுத்தடுத்த வாரங்களில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, ஒரு நாளைக்கு இரண்டாயிரத்திற்கு மேல் இருந்தது. ஆகஸ்ட் 16ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும். இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 507 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுவரை 1லட்சத்து 33ஆயிரம் பேர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 33ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த ஆண்டு 27 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். இணையதளம் மூலமே சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சரிபார்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச்சான்றிதல், வசிப்பிட சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தமிழ்நாட்டு மாணவர்கள் பிளஸ் 1 மதிப்பெண் சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்றும் மாணவர்கள் தங்களின் சான்றிதழ் பதிவேற்றும் பணி ஜூலை 31ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications