TNPSC குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.. சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது தொடங்குகிறது?
சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த அக். 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கிடையே குருப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வாளர்களின் பட்டியல் இப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரும் நவ.9ம் தேதி முதல் தங்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணிகள் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், அதாவது டிஎன்பிஎஸ்சி மூலமாகவே நிரப்பப்படும். தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி வருடா வருடம் தேர்வுகளை நடத்தி வருகிறது.

டிஎன்பிஎஸ்சி க்ரூப் தேர்வுகளைப் பொறுத்தவரை அது குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல தேர்வுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பல லட்சம் இளைஞர்கள் இந்த தேர்வுக்குத் தயார் ஆவார்கள்.
க்ரூப் 4: குறிப்பாக க்ரூப் 4 தேர்வைப் பலரும் எதிர்நோக்கிக் காத்து இருப்பார்கள். க்ரூப் 4க்கு டிகிரி எதுவும் தேவையில்லை.. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தாலே போதும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் க்ரூப் 4 தேர்வை எழுதுவார்கள். அதன்படி இந்தாண்டு விஏஓ, வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட காலியிடங்கள் நிரப்பத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை சுமார் 15.80 லட்சம் பேர் எழுதினர். விடைத்தாள்கள் திருத்தம் பணி துரிதமாக நடந்த நிலையில், கடந்த அக். 28ம் தேதி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. முதலில் 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்பத் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் 559 பணியிடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491ஆக உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பு: தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இப்போது அடுத்த கட்டமாகச் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் அக்டோபர் 28ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate verification) மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீடு விதி, காலி பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இன்று (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட ஆறு வேலை நாட்களில் இப்பட்டியல் விரைவாக வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது தங்கள் சான்றிதழ்களை நவம்பர் 9 முதல் 21ம் தேதி வரை தேர்வாணையத்தின் இணையதளத்தின் ஒருமுறை பதிவு பிரிவு (One Time Registration Platform) வாயிலாகப் பதிவேற்றம் செய்யலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications