சப் கலெக்டர், காவல் துறை டிஎஸ்பி பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு இன்று தொடக்கம்
சென்னை: சப் கலெக்டர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, வருவாய் துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்காக தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி சார்பில் இன்றைய தினம் குரூப் 1 பிரதான தேர்வு (mains) நடத்தப்படுகிறது. 90 பணியிடங்களுக்காக நடத்தப்படும் இந்த தேர்வை 1888 பேர் எழுதுகிறார்கள்.
தமிழக அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)குரூப் 1 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்புகிறது. அதாவது சப் கலெக்டர், காவல் துறை டிஎஸ்பி, வணிகவரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியிட்டது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர். முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியானது. அதில் தேர்வானவர்கள் மெயின் தேர்வு எழுதுகிறார்கள்.
அந்த வகையில் டிசம்பர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இன்று தமிழகத்தில் தொடங்கும் இந்த தேர்வு 90 பணியிடங்களுக்கு நிரப்பப்படுகிறது. இந்த தேர்வை 1232 ஆண்கள், 655 பெண்கள், 1 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1888 பேர் எழுதுகிறார்கள். இந்த தேர்வு 19 மையங்களில் நடத்தப்படுகிறது.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications