குரூப் 2, 2 ஏ தேர்வு: டிஎன்பிஸ்சி தந்த சர்ப்ரைஸ்.. 57 நாட்களில் ரிசல்ட் வெளியீடு! உடனே செக் பண்ணுங்க
சென்னை: குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2 ஏ தேர்வை சுமார் 5.8 லட்சம் பேர் எழுதினர். செப்டம்பர் 14 ஆம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில், 57 நாட்களுக்குள் தேர்வு முடிவை டிஎன்பிஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வர்கள் tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexmas.in -என்ற வெப்சைட்டில் அறியலாம்.
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. குரூப் 1 முதல் குரூப் 4 வரை என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை டிஎஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது.

அந்த வகையில், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப் 2 பதவிகளுக்கு 507 காலி பணியிடங்களும், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப்பு 2 ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. பட்டப்படிப்பு தகுதி கொண்ட இந்த குரூப் 2, 2 ஏ தேர்வுகளை சுமார் 5 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வு நடைபெற்று 57 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்று இந்த தேர்வு முடிவினை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexmas.in -என்ற வெப்சைட்டில் அறிந்து கொள்ளலாம்.
இன்று வெளியான குரூப்-2, 2 ஏ தேர்வு முடிவில் 29,790 தேர்வர்கள் தேர்ச்சி பெற்று இருப்பது தேர்வு முடிவு புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்து இருக்கிறது. இதில் குரூப்-2 பதவிகளுக்கு 7,987 பேரும், 2ஏ பதவிகளுக்கு 21, 803 பேரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் அதற்கு வரும் சனிக்கிழமை முதல் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தமிழ் தகுதித்தாள் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும், குரூப்-2ஏ பதவிகளுக்கு கொள்கைகுறி வகையிலான கணினி வழி பொதுப் பாடத் தேர்வு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியும், குரூப்-2 பதவிகளுக்கு விரித்துரைக்கும் வகையிலான பொதுப்பாடத் தேர்வு 25 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக வெளியிட தொடங்கியிருப்பது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தயார் ஆகும் இளைஞர்கள் பெரிதும் நம்பியிருப்பது தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப் தேர்வுகளைத்தான்.
அரசு பணி கனவுகளுடன் பல லட்ச்கணக்கான போட்டி தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். தேர்வர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆக வசதியாக ஆண்டு கால அட்டவணையும் டிஎன்பிஎஸ்சி வெளியிடுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது. அதன்படி, அடுத்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி தேர்வு நடைபெறும்.
தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும். தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். ஒருங்கிணைந்த டெக்னிக்கல் பணிகளுக்கான (நேர்முகத்தேர்வு) அறிவிப்பு மே 7 ஆம் தேதி வெளியிடப்பட்டு ஜூலை 21 ஆம் தேதி தேர்வு நடைபெறும். குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டு செப்டம்பர் 28 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications