டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் பாடத்திட்டம் மாற்றம்.. மொழித்தாள் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் பொது அறிவு வினாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வில் நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி குரூப் 2 ஏ தேர்வில் இனி ஒரு தேர்வுக்கு பதிலாக இரு தேர்வு முறை அமலுக்கு வருகிது. அதாவது குரூப் 1 தேர்வில் இருப்பதை போல், முதல் நிலை தேர்வு மற்றும் பிரதான தேர்வு என இரண்டு தேர்வுகள் அறிமுகம் ஆகிறது.
இதேபோல் மொழித்தாள் பகுதி தனியாக இருந்தது நீக்கப்பட்டு, தமிழக அரசியல் வரலாறு, தமிழக பாரம்பரிய பகுதிகள், பொது அறிவு பாடப்பகுதியிலேயே சேர்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications