டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு! பிப். 25 இல் தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணிகளுக்கு போட்டி தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வுகள் ஒவ்வொரு நிலையிலான பணிக்கும் ஒவ்வொரு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

கிளார்க், விஏஓ உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 2, 2ஏ தேர்வுகள், குரூப் 1 உள்ளிட்டவை உயர் பதவிகளுக்கு நடத்தப்பபடுகிறது. இதில் அரசு போடும் தகுதி, விதிகளின் அடிப்படையில் யாருக்கெல்லாம் பொருந்துகிறதோ அவர்கள் தேர்வை எழுதலாம்.
இது மட்டுமல்லாமல் ஏற்கெனவே பணியிலிருக்கும் அரசு ஊழியர்களுக்கும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கு பதவி உயர்வுக்காக நடத்தப்படுகிறது. தற்போது குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு இன்னும் தேர்வு முடிவுகள் வரவில்லை. இந்த நிலையில் வரும் 25 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு நடைபெறுகிறது.
இதற்கான நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்) இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வை 10 லட்சம் பேர் முதல் நிலை தேர்வை எழுதினர். அவர்களில் இருந்து மதிப்பெண் அடிப்படையில் 58 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு முதன்மை தேர்வை எழுதுகிறார்கள். https://www.tnpsc.gov.in/ என்ற இணையப்பக்கத்தில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்












Click it and Unblock the Notifications