டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.. விண்ணப்பிக்க போறவங்களுக்கு புதுமையாக அலார்ட்
சென்னை: வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு வரும் செப்டம்பர் 1-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் -4 தேர்வுக்கு ஜுலை 14 முதல் http://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணிகள்தேர்வு வாரியம் தமிழக அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களூக்கு குரூப் 1, குரூப்2. குரூப்4 மற்றும் மருத்துவ பணியிடங்கள் மற்றும நீதித்துறை பணியிடங்கள் உள்பட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்புகள் முறைப்படி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

இதன்படி, வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு வரும் செப்டம்பர் 1-ந்தேதி நடக்க உள்ளது.இந்த தேர்வில் பங்கேற்பதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜுலை 14ம் தேதி முதல் http://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துளளது.
விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட ஒவ்வொரு பணிகளுக்கும் எவ்வளவு காலி பணியிடங்கள் உள்ளது? இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் http://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் ஜூலை 14-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக தயாராக வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது தேர்வு தேதி மற்றும் விண்ணப்பிக்கும் நாள் ஆகிய விவரங்கள் மட்டும் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வை 17 லட்சம் பேர் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications