டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான 2024ம் ஆண்டுக்கான பல்வேறு தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட காலஅட்டவணை மற்றும் தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வு உள்பட பல்வேறு தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து இன்று திருத்தியமைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:
அதன்படி 6,244 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் ஜுன் 9ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி, 1சி தேர்வுகள் (Preliminary) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் ஜுலை 12ம் தேதி நடைபெறுகிறது.
இதுதவிர கடந்த மார்ச் மாதம் 28 ம் தேதி 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு (Preliminary) தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு ஜுலை 13ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் 2,030 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வரும் ஜுன் மாதம் 28 ம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளுக்கான தேர்வு (Preliminary) செப்டம்பர் 28 ல் நடைபெறுகிறது.
இதுதவிர 105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவையில் (டிகிரி மற்றும் டிகிரி முடித்தவர்கள்) நேர்க்காணலுடன் கூடிய பதவிகளுக்கான அறிவிப்பு என்பது மே மாதம் 15ம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு தேர்வு என்பதுஆகஸ்ட் 8 ம் தேதி நடைபெறும்.
மேலும் 605 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவையில் (டிகிரி மற்றும் டிகிரி முடித்தவர்கள்) நேர்க்காணல் இல்லாத பதவிகளுக்கான அறிவிப்பு என்பது ஜுலை 26ம் தேதி வெளியாகும். இந்த தேர்வு என்பது அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதுதவிர 730 காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைக்கான (டிப்ளமோ/ஐடிஐ லெவல்) தேர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வெளியிடப்படும். இதற்கான தேர்வு நவம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது.
இதுமட்டுமின்றி 50 பணியிடங்களுக்கான Assistant Public Prosecutor Grade II in Prosecution Department (Preliminary) தேர்வு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 13ம் தேதி வெளியிடப்படும். இதற்கான தேர்வு டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications